Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அரசுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள்

Posted on June 8, 2025 by Admin | 469 Views

தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முறையான தேர்வு முறைமையின்றியே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கம் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “இது கல்வித்துறையில் நேர்மையையும் தரத்தையும் பாதிக்கும் செயலாகும். கல்வித் தகுதியின் அடிப்படையில், சீரான முறைப்படி மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நியமனங்கள் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட விடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.