Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கெஹெலிய ரம்புக்வெல்லா வீட்டுப் பணியாளர் இலஞ்ச ஊழல் வழக்கில் கைது

Posted on June 11, 2025 by Arfeen | 103 Views

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.சுகாதார அமைச்சில் பெயரளவிலான நியமனங்கள் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர ஊதியங்களை முறையற்ற வகையில் பெற்றுக்கொண்டதாக நடைபெற்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பின்னணியிலேயே, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அமைச்சரின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.