Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை

Posted on June 12, 2025 by Hafees | 262 Views

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.