Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பேராதனை – கண்டி இடையிலான ரயில் சேவை வழமைக்கு

Posted on June 12, 2025 by Hafees | 153 Views

பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக, கண்டிக்குச் செல்லும் ரயில்கள், பேராதனை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

இந்நிலையில், இன்று ரயில் பாதை சரிசெய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.