Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்

Posted on June 27, 2025 by Admin | 305 Views

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று உனவட்டுன் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்விருவரும் மாத்தறை – வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நடைபெறவிருந்த இன்றைய நாளில் காணாமல் போயுள்ளனர்.

காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் விசாரணைகள் முடிந்த பின்னர் மட்டுமே வெளியிடப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அரசியல் மையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.