Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான முஷர்ரபின் இணைவினை 58% மக்கள் சுயநலம் என கருத்து பதிவு

Posted on June 29, 2025 by Admin | 409 Views

பொத்துவில் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷர்ரப் அண்மையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த அரசியல் இணைவு சமூக ஊடகங்களில் விரிவான பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த புதிய இணைவை கருத்தில் கொண்டு, சமூக வலைதளங்களில் எமது தெளிவு இணையதளம்(www.thelivu.net) நடத்திய கருத்துக்கணிப்பில், பொதுமக்களின் பார்வை பின்வருமாறு பதிவாகியுள்ளது:

🔹 சுயநல நோக்கம் – 58%

🔹 மக்கள் சேவை நோக்கம் – 21%

🔹 தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்தல் – 14%

🔹 வேறு கட்சிகளால் ஏமாற்றம் – 4%

இந்த கணிப்புகளின் அடிப்படையில், முஷர்ரப் அவர்களின் கட்சி மாறுதல் “சுயநல நோக்குடன் செய்யப்பட்டது” என பெரும்பான்மை மக்கள் கருதுவதாகத் தெரிய வருகிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் அவர் நிகழ்த்திய மக்கள் சேவைகளை மையமாக கொண்டு, அவர் அரசியலுக்கு அப்பாலும் பொதுநலத்திற்காக செயல்படக்கூடியவர் என நாம் நம்புகிறோம்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அவர் கொண்டுள்ள புதிய அரசியல் பாசறை, எதிர்காலத்தில் எந்த பாதையை எடுக்கிறது என்பதே மக்கள் எதிர்பார்க்கும் விடயம். இந்த இணைவு ஒரு சுயநல முடிவல்ல, மாறாக பொதுநலத்தின் ஒரு தொடக்கமாக அமைய வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.

முடிவாக, மக்கள் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் தாண்டி, தவிசாளர் முஷர்ரப் அவர்கள் பாரிய பொறுப்புணர்வுடன் பொத்துவில் மக்களுக்கு பயனளிக்கும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்துவார் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது.