Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பொத்துவில் பிரதேச சபை திண்மக்கழிவு சேகரிப்பில் புதிய ஒழுங்கமைப்பு – தவிசாளர் முஷர்ரப் களத்தில்

Posted on July 5, 2025 by Admin | 216 Views

(சனீஜ்)

பொத்துவில்-05, சர்வோதயபுரம் பகுதியில் உள்ள பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான திண்மக்கழிவுகள் சேகரிக்கும் நிலநிரப்பு தளத்தில் (landfill yard) மேற்கொள்ளப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிடும் முகமாக, பிரதேச சபை தவிசாளர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் இணைந்து, தளத்தில் நடைபெற்று வரும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, தேவைப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் கலந்துரையாடினர்.