Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நெல்லுக்கான உத்தரவாத விலை விவசாயிகளை பாதிக்காது – விவசாய பிரதி அமைச்சர்

Posted on July 5, 2025 by Admin | 266 Views

நாட்டின் சில பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல்லுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலை விவசாயிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என விவசாய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், நெல் அறுவடையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த விலை போதுமானதாக இல்லையென்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லிற்கான விலை, உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப பொருந்துவதில்லை என்பதே விவசாயிகளின் மையக் குற்றச்சாட்டு.

அரசு நியமித்துள்ள விலையால் விவசாய பொருளாதாரமும் சிக்கலடையக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது, நெற்பயிர் உற்பத்திக்கான நிதிச் செலவுகளை கருத்தில் கொண்டு உத்தரவாத விலையை திருத்த வேண்டும் என்பதாகும்.