Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

கல்வி வளர்ச்சி குறித்து வடமேல் ஆளுநருடன் ஆலோசித்த அம்பாறை எம்.பி. உதுமாலெப்பை!

Posted on July 15, 2025 by Admin | 353 Views

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று (14) வடமேல் மாகாண ஆளுநர் திரு. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய மற்றும் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. டப்ளியு.எம்.சி.கே. வன்னிநாயக ஆகியோரை குருநாகலில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கல்வி மற்றும் நிர்வாக தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் பகிர்ந்த அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.