Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கிய கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்

Posted on July 19, 2025 by Admin | 283 Views

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சந்தேக நபருக்கு பிணை பெற உதவுவதற்காக தவறான தகவல்களுடன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றியுள்ள காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளியின் கடந்த கால குற்றச்செயல்களை மறைத்து, போலி கையொப்பத்துடன் தன்னுடைய மேலதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கையை போலியோடு உருவாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட போலி அறிக்கையை வைத்து, சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக முறையீடு கிடைத்ததை அடுத்து, களுத்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தொடங்கியுள்ளார். விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் குறித்த கான்ஸ்டபிளின் செயல்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலரை இடைநீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.