கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் கருத்தில், ஒரு வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகும். தற்போது நிலவும் 50-60 மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் தரமான கல்வி வழங்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்காக காலி, தக்ஷிணபாய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விழாவில், புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இந்தத் தொடரில் நடத்தப்படும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய அவர், “புதிய கல்வி மாற்றங்கள் அரசாங்கத்தின் ஆட்சிக்கு வருவதற்கே முன்பே திட்டமிடப்பட்டவை. கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துக்களை திரட்டி உருவாக்கப்பட்டவை. இது அரசாங்கத்தின் தனிப்பட்ட முனைப்பல்ல, நாட்டின் எதிர்கால நலனுக்காக எடுக்கப்படும் பொறுப்பான ஒரு நடவடிக்கை” என்றார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் முக்கிய அம்சங்களாக:
“மாற்றங்களுக்கு எதிர்ப்பு காண்பவர்கள் இருப்பது இயல்பே. சிலர் அரசியல் நோக்கிலும் இதை விமர்சிக்கிறார்கள். இருந்தாலும், நம் கடமையை புறக்கணிக்க முடியாது. மக்கள் நம்மை தேர்ந்தெடுத்ததே, இந்த மாற்றங்களை முன்னெடுக்கவே,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 16 ஆண்டுகளாக மாற்றப்படாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை இப்போது மாற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி வழங்கி, அதன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
முழுமையான கல்வி மாற்றம் என்பது சவாலானது என்றாலும், எதிர்கால மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமானால், இதை தவிர்க்க முடியாது என்பதே பிரதமரின் தைரியமான முடிவாகும்.