Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பிள்ளையான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Posted on July 20, 2025 by Admin | 298 Views

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன், பொதுவாகப் “பிள்ளையான்” என அழைக்கப்படுபவருடன் தொடர்புடைய சில விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், கடந்த நாடாளுமன்ற உரையில் ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்ததாக தான் கூறியிருந்ததை நினைவுபடுத்தினார்.

“இந்த விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்,” என அவர் கூறினார்.

பிள்ளையான் மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதையும், ஏற்கனவே விசாரணைகளில் கண்டறியப்பட்ட முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

“விசாரணைகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிடைத்த சில தகவல்களை ஊடகங்களில் பகிர முடியாது. நீதிமன்றச் சட்டத் திட்டத்தின் அடிப்படையில் சீராக செயல்பட வேண்டிய தருணம் இது,” என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.