Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

ரம்புட்டான் பழத்தினால் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Posted on July 24, 2025 by Admin | 483 Views

இந்த ஆண்டில் ரம்புட்டான் பழத்தை ஒட்டிய நிகழ்வுகளில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விபத்துக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய காரணமாக, ரம்புட்டான் மரங்களை விலங்குகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுவது குறிப்பிடப்படுகிறது. இது எதிர்பாராத மின்சாரப்பாய்ச்சலால் பலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.

தற்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மரத்தில் ஏறியபோது தவறி விழும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும், சிறு பிள்ளைகள் ரம்புட்டான் சாப்பிடும் போது விதையை விழுங்கும் அபாயம் இருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத் துறையின் வலியுறுத்தல்:

  • மின்சார வேலிகள் பதிப்பதிலிருந்து தவிர்க்க வேண்டும்
  • ரம்புட்டான் மரங்களுக்கு ஏறும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும்
  • குழந்தைகளுக்குப் பழங்களை வழங்கும் போது விழுங்கும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும்

விபத்துக்களை தவிர்க்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.