இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் கல்வி அமைப்பின் தற்போதைய நிலைமை குறித்து அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,
இதன் அடிப்படையில், நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15% இல் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர். மேலும், 100 மாணவர்களுக்கும் கீழ் உள்ள பாடசாலைகள் 3144 எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனூடாக மனித வளம் மற்றும் நிதி வீணாகும் நிலை தொடர்கின்றது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சில பாடசாலைகளை மூட வேண்டிய அவசியம், சிலவற்றை இணைக்க, மேலும் சில புதிய பாடசாலைகள் கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.