Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம்

Posted on July 28, 2025 by Admin | 319 Views

மேல் மாகாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை இனிமேல் மொபைல் செயலி மூலம் எளிதாக செலுத்த முடியும்.

GovPay என்ற புதிய டிஜிட்டல் சேவையை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரம் மற்றும் முயற்சி சுமை குறையும் வகையில் GovPay செயலி பெரும் பயனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது, அரசின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், நடைமுறை பணப்பரிவர்த்தனைகளை மின்னணுவாக்கும் அடித்தள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.