Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம்

Posted on July 28, 2025 by Admin | 342 Views

மேல் மாகாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை இனிமேல் மொபைல் செயலி மூலம் எளிதாக செலுத்த முடியும்.

GovPay என்ற புதிய டிஜிட்டல் சேவையை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரம் மற்றும் முயற்சி சுமை குறையும் வகையில் GovPay செயலி பெரும் பயனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது, அரசின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், நடைமுறை பணப்பரிவர்த்தனைகளை மின்னணுவாக்கும் அடித்தள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.