Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கைது

Posted on July 28, 2025 by Admin | 344 Views

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

திட்டமிட்டு செயல்படும் குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு பதிவு செய்த குற்றச்சாட்டின்பேரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.