Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சத்தில் சிக்கினார்

Posted on July 30, 2025 by Admin | 270 Views

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, கமினியபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், குறித்த பொலிஸ் அதிகாரி மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கும் பெயரில் முறையற்ற விதமாக பணம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமாக மணலை டிராக்டர் மூலம் கடத்த அனுமதிக்கும் சலுகைக்காக மாதம் ஒரு முறை ரூ.50,000 இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாகவும், மேலும் அதே தொழிலதிபரின் புதிய வீட்டு கட்டுமானத்திற்காக மூன்று கன மீட்டர் மணல் அல்லது அதற்குச் சமமான ரூ.45,000 கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்தத் தொகை ரூ.40,000 ஆக குறைக்கப்பட்டு, பணம் பெற்றபோதே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் வெல்லவாய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இச் சம்பவம் சம்பந்தமாக விசாரணைகள் தொடருகின்றன.