Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில்

Posted on August 10, 2025 by Admin | 157 Views

நாட்டின் தேசிய பூங்காக்களை பார்வையிட விரும்புவோர் இன்று (10) முதல் ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டுகளை பெறும் வசதி பெறுகின்றனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டுகள் எளிதாகப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கை, சமீபத்தில் கவுடுல்ல தேசிய பூங்காவில் ஏற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் நீண்ட வரிசை மற்றும் அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (09) அங்கு காணப்பட்ட நீண்ட நேரக் காத்திருப்பு, பலருக்கு சிரமம் ஏற்படுத்தியிருந்தது.

ஆன்லைன் சீட்டு வழங்கும் புதிய நடைமுறை, பயணிகளின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தி, தேசிய பூங்கா அனுபவத்தை மேலும் சீராக்கும் என்று திணைக்களம் நம்புகிறது.