Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

நாளை முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடங்கவுள்ள நிலையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவிப்பு

Posted on August 16, 2025 by Admin | 369 Views

தபால் ஊழியர்கள் நாளை (17) முதல் ஆரம்பிக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னிட்டு, அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிவித்துள்ளார்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாளை முதல் இடைநிறுத்தமின்றி பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.