Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 2, 2026

ரணிலின் கைது பற்றிய செய்தி எனக்கு பிரபஞ்சத்திலிருந்து வந்தது- யூடியூபர் சுதா

Posted on August 23, 2025 by Admin | 300 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்ற தகவல் பிரபஞ்சத்திலிருந்து தமக்கு கிடைத்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜனாதிபதி அனுர திசாநாயக்க எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதத்த திலகசிறி தனது ஆன்லைன் சேனலில் வெளியிட்ட காணொளியில் இக்கருத்துகளை பதிவு செய்துள்ளார்