Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

Posted on August 25, 2025 by Admin | 220 Views

(அபூ உமர்)

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (25.08.2025) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். உதுமாலெப்பை (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர்), எம். எஸ். அப்துல் வாசித், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.