Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்தி குறித்து தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியுடன் சிறப்பு சந்திப்பு

Posted on August 29, 2025 by Admin | 343 Views

(தெளிவு செய்தியாளர்)

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம். சீ. ஜூனைட் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு சந்திப்பு இன்றைய தினம் (29) இடம்பெற்றது.

இச் சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச பாடசாலைகளுக்கு தொடருறு கல்வி ஆசிரிய பயிலுநர்களை நியமிப்பது குறித்தும், பிரதேச கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். சம்சுத்தீன், ஆசிரிய ஆலோசகர்கள் மௌலவி என். ஆர். நஸீர், மௌலவி எம். ஐ. சப்றி, முன்னாள் அதிபர் எம். ஏ. அன்சார், ஊடகவியலாளர் எம். ஜே. எம். சஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.