Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

நிந்தவூரின் ஆன்மீக, கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு நடைபெற்ற கலந்துரையாடல்

Posted on August 30, 2025 by Admin | 237 Views

(சரப்)

நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா கிளையின் ஏற்பாட்டில், நிந்தவூரின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A.M. தாஹிர், கௌரவ பிரதேச சபை தவிசாளர் A. அஸ்பர் JP, ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஜௌபர் SSP, நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி M.I. ஜஃபர் (பலாஹி) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிந்தவூரின் ஆன்மீகம் மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாப்பது அவசியம் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். இதற்காக, ஜும்ஆப் பள்ளிவாயல் தலைமையில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது