Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

Posted on September 1, 2025 by Admin | 360 Views

அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களில் உள்ள பயணிகளும் இன்று (செப்டம்பர் 1) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

இந்த விதிமுறைக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னா தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஆசனப்பட்டி வசதி இல்லாத சில வாகனங்களில் அவை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்