Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

32 வயது பெண் மருத்துவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலி

Posted on September 3, 2025 by Admin | 234 Views

இரத்தினபுரி – பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த 32 வயதான மதுபாஷினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு குழந்தையின் தாய் ஆவார்.

பெல்மடுல்லா சென்றடைந்த பேருந்திலிருந்து இறங்குவதற்காக முன் கதவுக்கு வந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகலில் நிகழ்ந்த இந்த விபத்திற்குப் பிறகு, மருத்துவர் மதுபாஷினி 13 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், காயங்களைத் தாங்க முடியாமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.