Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

பலரின் உயிர்களை பறித்த சுற்றுலா பயண விபத்து

Posted on September 5, 2025 by Admin | 421 Views

எல்லே- வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகே நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.

பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும் 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 சிறுவர் உள்ளனர்.

தகவலின்படி, சுற்றுலா பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் வீழ்ந்ததே இந்த விபத்துக்கு காரணமாகும். சம்பவத்தின் போது பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்விபத்தில் சிக்கியிருந்த பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்களை ஏற்றிச் சென்றதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மோசமான நிலைமைகள் காரணமாக மீட்பு பணிகள் சிரமத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.