Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பாராளுமன்றத்தில் பரபரப்பு …சபை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Posted on September 11, 2025 by Admin | 238 Views

இன்று காலை 9.30 மணிக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான விதிகளின்படி நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கின.

இந்த நிலையில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண் ஜெயசேகரை எதிர்த்து எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.