Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

Posted on September 13, 2025 by Admin | 124 Views

காவல்துறை பொது பரிசோதகரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 3,709 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை மத்திய பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மட்டும் 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் மொத்தம் 26,985 பேரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது