Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

Posted on September 13, 2025 by Admin | 246 Views

காவல்துறை பொது பரிசோதகரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 3,709 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை மத்திய பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மட்டும் 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் மொத்தம் 26,985 பேரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது