Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அடுத்த வருடம் முதல் உரிய காலத்தில் பரீட்சைகள் நடைபெறும்

Posted on September 13, 2025 by Admin | 310 Views

அடுத்த வருடம் முதல் சாதாரண தர (சா/த) மற்றும் உயர்தர (உ/த) பொதுப் பரீட்சைகள் தங்களுக்குரிய காலப்பகுதியில் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை 2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலை விடுமுறைகள் பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.