Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

Posted on September 14, 2025 by Admin | 153 Views

மாரவில முது கட்டுவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது …

கரை ஒதுங்கியிருந்த சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லை. நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.