Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அக்கரைப்பற்று மாநகர சபையில் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

Posted on September 15, 2025 by Admin | 352 Views

(அக்கறைப்பற்று செய்தியாளர்)

அக்கரைப்பற்று மாநகர சபையின் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளுராட்சி வார நிகழ்வு 2025 செப்டம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை இன்று காலை 10.00 மணிக்கு மாநகர அதாஉல்லா அரங்கில் மாநகர முதல்வர் கெளரவ ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வின் போது, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கையேற்றப்பட்டு, அவற்றை முதல்வர் நேரடியாக பரிசீலித்து உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.

மேலும், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நீர் வழங்கல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை பொதுமக்களுக்காக வழங்கி வருகின்றன. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.