(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிம்பர் இன்று (அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜும்ஆ உரையுடன் இணைந்து திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இன்றைய ஜும்ஆ உரையை ஸம் ஸம் பெளண்டேசனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முப்தி யூஸூப் ஹனீபா (பின்னூரி) அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.