Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on October 15, 2025 by Admin | 227 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இறக்காமம் பிரதேச அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15.10.2025) பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம். முஸ்மி, பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பிரதேச மக்களின் நலனையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கான பல முக்கியமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.