Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Posted on October 15, 2025 by Admin | 377 Views

இலங்கையில் வரும் ஒக்டோபர் 16 முதல் 28ஆம் திகதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சியால் ஆறுகள் கரைபுரண்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனை முன்னிட்டு, அனைத்து திணைக்களங்களும் மற்றும் பொதுமக்களும் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தேவையானபோது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.