Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பாராளுமன்றத்தில் இளஞ்சிவப்பு ஆடை அணிய பெண் உறுப்பினர்கள் ஒன்றிணைப்பு

Posted on October 21, 2025 by Admin | 141 Views

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.

மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு சபாநாயகர் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து, நாளைய சபை அமர்வில் பங்கேற்கும் போது அதற்கான அறிவிப்பின் படி செயல்படுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.

மேலும், உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிறுத்தும் அடையாள சின்னத்தை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அந்த சின்னம் நாளை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.