Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் பிடிபட்டார்

Posted on October 26, 2025 by Admin | 284 Views

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம நாவின்ன பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின்போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இந்த கைது இடம்பெற்றது.

இக்காரியத்தில் அரச புலனாய்வு சேவையும் ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.