Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஹெரோயின் வழக்கில் சிக்கிய பாடசாலை அதிபர் பணியிடை நீக்கம்

Posted on November 7, 2025 by Admin | 105 Views

அனுராதபுரத்தில் பெருமளவு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவின் அடிப்படையில், எப்பாவலயிலுள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மீது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய அறிக்கையைத் தொடர்ந்து, அந்த அதிபர் நிறுவனச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படுவதால் அவரை பணியிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டதாக கல்விப் பணிப்பாளர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் , முன்னாள் தேசிய மக்கள் சக்தி (NPP) நகரசபை உறுப்பினரின் கணவராவார். இவர் கடந்த வாரம் சுமார் ரூ. 2 கோடி பெறுமதியான 1.185 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் நேற்று (6) சந்தேக நபரை நவம்பர் 12ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. மேலும் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அவரை தொடர்ந்து விசாரிக்க அனுமதியும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் சந்தேக நபரின் மனைவி பேலியகொட நகரசபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினராவார். தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.