Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

காசாவில் போர் நிறுத்தம் பலனின்றி நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

Posted on November 9, 2025 by Admin | 263 Views

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, போர் நிறுத்தம் அமல்பெற்ற கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது 241 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 619 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களின் தொடர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.