Top News
| அம்பாறை மாவட்ட கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு | | 36 பிரதான நீர்த்தேக்கங்களும் 52 நடுத்தர குளங்களும் வான் பாய்கின்றன | | பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு |
Dec 21, 2025

உயிரிழப்பு 159 ஆகவும், காணாமல் போனோர் 203ஆகவும் உயர்வு

Posted on November 29, 2025 by Admin | 90 Views

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும், இதுவரை 203 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த நிலையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 2,34,503 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,33,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,822 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 919 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.