Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நாட்டில் 206 பாதைகள் மற்றும் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன

Posted on November 29, 2025 by Admin | 295 Views

சீரற்ற வானிலை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் நாடு முழுவதும் பல முக்கிய பாதைகள் மற்றும் பாலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகன் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, பிரதான பாதைகள் உட்பட மொத்தம் 206 பாதைகள் இப்போது போக்குவரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

மேலும், 10 பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்து வழிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.