Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 19, 2025

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் அட்டாளைச்சேனையில் சேகரிப்பு

Posted on December 2, 2025 by Admin | 89 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இயற்கையின் சீற்றத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் பொருட்கள் சேகரிக்கும் செயற்பாடானது நேற்றைய தினம்(01) ஆரம்பிக்கப்பட்டு இன்று(02) இரவு 12:00 மனி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த 05 நாட்களாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முறையான மின்சார வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் இன்மையால் இச்செய்தி அட்டாளைச்சேனை மக்களை சென்றடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆகவே, இச் செய்தியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் எம்மால் இயன்ற பொருட்களை வழங்கி எம் உறவுகளின் துயர் நீக்க முன்வருவோம். இச்செயற்பாடு மூலம் உங்களது சிறு உதவியும் பலரின் உயிரைப் பாதுகாக்கும் பெரும் உதவியாக மாறும்.