நாட்டில் ஏற்பட்ட அண்மைய அனர்த்தங்களால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளும் எதர்வரும் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படுமென அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் குறிப்பிடப்பட்ட தினத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.