Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

Posted on December 9, 2025 by Admin | 320 Views

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மின்னல் எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் திடீர் பலத்த காற்று வீசும் அபாயமும் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.