கோதுமை மாவும் சீனியும் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி செயற்கைத் தேன் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை புல்மோட்டை பொலீஸ் கைது செய்துள்ளது.
சந்தேக நபரின் இல்லத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட தேன் நிரப்பப்பட்ட 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 பீப்பாய்களும், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேலும் 2 பீப்பாய்களும் பொலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் வீட்டிற்கு சென்ற நேரத்திலும், அவர் தேன் தயாரிப்பு செயல்முறையில் ஈடுபட்டிருந்தது பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீனி, கோதுமை மா மற்றும் பிற இரசாயனப் பொருட்கள் கலந்து இத்தேன் தயாரிக்கப்பட்டதோடு கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் உள்ள சில ஆயுர்வேத மருந்தகங்களுக்கு இவை விற்பனை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.