Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்கள் குறித்து சஜீத் பிரேமதாசா தலைமையில் ஆலோசனை

Posted on December 14, 2025 by Admin | 289 Views

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களின் நிலைமை குறித்து ஆராயும் ஆலோசனைக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் இன்று (14) கம்பளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

கம்பளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ரியா மசூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.