Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

Posted on December 18, 2025 by Admin | 351 Views

நிலவும் தொடர்மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாயத் தொடங்கியுள்ளதாக மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவை அடைந்துள்ளதால் அது விரைவில் வான் பாயும் நிலை உருவாகக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.