Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

Posted on December 24, 2025 by Admin | 343 Views

நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அமுலில் இருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கு நேற்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த வழக்கில் அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

அந்த பிடியாணையின் அடிப்படையில் இன்று அவர் பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.