2026ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வவுச்சர்கள் நாளை மறுதினம் (15) நிறைவடையவிருந்தன. எனினும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதன் காலவரையறை தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.