Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று 75 மி.மீ வரை மழை

Posted on February 20, 2026 by Admin | 254 Views

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துடன் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு நேரங்களில் மழை பதிவாகலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால், அதனால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.