“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2026 மார்ச் 1 ஆம் திகதி தொடங்கும் வாரம் “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது. இவ்வாரத்தின்போது அரச நிறுவனங்கள், பாதுகாப்பு துறைகள், கல்வி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை முன்னெடுக்க உள்ளன.
இந்தத் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு 24ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.